குறிஞ்சிப்பாடியில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதமானது.
குறிஞ்சிப்பாடி, பழைய காவல் நிலையம் அருகே உள்ள தச்சர் தெருவில் வசிப்பவர் இந்திராணி (50). இவரது குடிசை வீடு செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் கா.ராஜேந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.