மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, வேப்பூரில் சனிக்கிழமை மனிதச் சங்கிலி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் பேசியதாவது: வலுவான ஜனநாயகம் அமைந்திட அனைத்து வாக்காளர்களும் நேர்மையாக வாக்களிக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் இளைய வாக்காளர்கள் தவறாமல் வாக்களிப்பதுடன், தங்களது பெற்றோர், உறவினர்கள் அனைவரையும் வாக்களிக்கச் செய்திட வேண்டும் என்றார் ஆட்சியர்.
நிகழ்ச்சியில் கடலூர் சார்-ஆட்சியர் சரயூ, விருத்தாசலம் சார்-ஆட்சியர் பிரசாந்த், வட்டாட்சியர்கள் செந்தில்வேல், கவியரசு, தனியார் பாலிடெக்னிக் மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.