100% வாக்குப் பதிவு விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, வேப்பூரில் சனிக்கிழமை மனிதச் சங்கிலி நடைபெற்றது.


மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, வேப்பூரில் சனிக்கிழமை மனிதச் சங்கிலி நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் பேசியதாவது:  வலுவான ஜனநாயகம் அமைந்திட அனைத்து வாக்காளர்களும் நேர்மையாக வாக்களிக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் இளைய வாக்காளர்கள் தவறாமல் வாக்களிப்பதுடன், தங்களது பெற்றோர், உறவினர்கள் அனைவரையும் வாக்களிக்கச் செய்திட வேண்டும் என்றார் ஆட்சியர்.
 நிகழ்ச்சியில் கடலூர் சார்-ஆட்சியர் சரயூ, விருத்தாசலம் சார்-ஆட்சியர் பிரசாந்த், வட்டாட்சியர்கள் செந்தில்வேல், கவியரசு, தனியார் பாலிடெக்னிக் மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com