பைக் விபத்தில் தொழிலாளி சாவு

பைக் விபத்தில் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழந்தார்.

பைக் விபத்தில் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழந்தார்.
 நெய்வேலி வட்டம்-4, சுவாமி விவேகானந்தர் தெருவில் வசிப்பவர் தமிழரசி (29). இவரது கணவர் கோகுலகிருஷ்ணன் (38), என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நெய்வேலி வட்டம்- 3, இந்திரா காந்தி சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் நிகழ்விடத்திலேயே கோகுலகிருஷ்ணன் உயிரிழந்தார். இது குறித்து நெய்வேலி நகரிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com