பைக் விபத்தில் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழந்தார்.
நெய்வேலி வட்டம்-4, சுவாமி விவேகானந்தர் தெருவில் வசிப்பவர் தமிழரசி (29). இவரது கணவர் கோகுலகிருஷ்ணன் (38), என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நெய்வேலி வட்டம்- 3, இந்திரா காந்தி சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் நிகழ்விடத்திலேயே கோகுலகிருஷ்ணன் உயிரிழந்தார். இது குறித்து நெய்வேலி நகரிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.