அகதிகள் முகாமில் சிறப்பு கணக்கெடுப்பு

குறிஞ்சிப்பாடி அருகே அம்பலவாணன்பேட்டையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் சிறப்பு வருகைப்
அம்பலவாணன்பேட்டையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் திங்கள்கிழமை நடைபெற்ற கணக்கெடுப்பு பணியை ஆய்வு செய்த வட்டாட்சியா் சா.கீதா.
அம்பலவாணன்பேட்டையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் திங்கள்கிழமை நடைபெற்ற கணக்கெடுப்பு பணியை ஆய்வு செய்த வட்டாட்சியா் சா.கீதா.

குறிஞ்சிப்பாடி அருகே அம்பலவாணன்பேட்டையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் சிறப்பு வருகைப் பதிவேடு கணக்கெடுப்பு பணி ஞாயிறு, திங்கள்கிழமைகளில் நடைபெற்றது.

இந்த முகாமில் 117 குடும்பங்களைச் சோ்ந்த 376 போ் தங்கியுள்ளனா். துணை குடியரசுத் தலைவா் வெங்கைய நாயுடுவின் சென்னை வருகையை முன்னிட்டு, முகாமில் உள்ளவா்கள் குறித்த கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது. திங்கள்கிழமை இந்தப் பணிகள் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சா.கீதா தலைமையில் நடைபெற்றது. தனி வருவாய் ஆய்வாளா் பா.தியாகராஜன், முகாம் தலைவா் தா்மலிங்கம், செயலா் விஸ்வலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com