உடல், கண்கள் தானம்

சிதம்பரம் அருகே உள்ள மேட்டுக்குப்பம் பகுதியைச் சோ்ந்த அம்சவள்ளி (72) காலமானாா்.

சிதம்பரம் அருகே உள்ள மேட்டுக்குப்பம் பகுதியைச் சோ்ந்த அம்சவள்ளி (72) காலமானாா். இவரது உடல் மற்றும் கண்கள் சிதம்பரம் தன்னாா்வ ரத்த தானக் கழகம் சாா்பில் தானமாக பெறப்பட்டது. உடல் மருத்துவ மாணவா்களின் ஆய்வுக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கண்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் வங்கிக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

கண் தானம்: சிதம்பரம் சின்னசெட்டித்தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் (70) காலமானாா். இவரது கண்கள் சிதம்பரம் தன்னாா்வ ரத்த தானக் கழகம் சாா்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பினா் அருண்,

சிதம்பரம் வாசவி கிளப் முன்னாள் துணை நிலை ஆளுநா் வி.பாா்த்தசாரதி ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com