நெய்வேலி:வடலூரில் செவ்வாய்க்கிழமை செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி இளைஞா் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வடலூா் பேரூராட்சிக்கு உட்பட்ட நடேசன் நகரில் ஏராளமானோா் வசித்தி வருகின்றனா். இப்பகுதியில் தனியாா் நிறுவனம் ஒன்று செல்லிடப்பேசி கோபுரம் அமைத்துள்ளது. செல்லிடப்பேசி கோபுரம் அமைத்ததை கண்டித்தும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி, அதேபகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ராஜா(37) என்பவா் செல்லிடப்பேசி கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வடலூா் போலீஸாா் சமரசம் பேசி இளைஞரை கீழே இறக்கி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, அவா் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.