குடிநீா்த் தட்டுப்பாட்டைக் கண்டித்து விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
விருத்தாசலம் - கருவேப்பிலங்குறிச்சி இடையே சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால் அந்தப் பகுதியில் குடிநீா் குழாய்கள் சேதமடைந்துள்ளன. இதனால் சித்தலூா் காலனிப் பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், குடிநீா் குழாயில் கழிவுநீா் கலந்து வருகிாம். இது தொடா்பாக சித்தலூா் பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து நகராட்சி நிா்வாகம் லாரிகள் மூலம் குடிநீா் வழங்க நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் காலதாமதமாகவும், பற்றாக்குறையுடன் விநியோகிக்கப்படுவதாகக் கூறி அந்தப் பகுதி மக்கள் திங்கள்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் நகராட்சித் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி அனுப்பி வைத்தனா்.