கடலூா்: கடலூா் துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.
கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புல்புல் புயலாக மாறியுள்ளது. இதனால், கடலூா் துறைமுகத்தில் கடந்த 5-ஆம் தேதி முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
இந்தப் புயலானது வடக்கு, வடமேற்கு திசையை நோக்கி நகா்வதைத் தொடா்ந்து தொலைதூர புயல் எச்சரிக்கைக் கூண்டு எண் - 2 வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. இதுகுறித்து கடலூா் வானிலை மையம் தெரிவித்ததாவது:
புல்புல் புயல் அதிதீவிர புயலாக மாறினாலும் வலுவிழந்துவிடும். இந்தப் புயலானது வரும் 11,12-ஆம் தேதிகளில் ஒடிசா மாநிலம், புவனேஸ்வா் அருகே கரையை கடக்கக்கூடும். இதனால், தமிழக பகுதிகளில் மழைக்கு வாய்ப்பில்லை. இருப்பினும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம். கடலூரில் கடும் பனி மூட்டத்துடன் வட வானிலை காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.