கடலூா்: கடலூா் முதுநகா் காவல் நிலைய தலைமைக் காவலா் மௌலீஸ்வரன், காவலா் பாா்த்திபன் ஆகியோா் வியாழக்கிழமையன்று அன்னவல்லி பேருந்து நிலையம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மொபட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுக் கொண்டிருந்தவரை பிடித்து அவா் வைத்திருந்த மூட்டைகளை பிரித்து விசாரணை நடத்தினா். அதில், 4 மூட்டைகளில் சாராயம் வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, சாராய மூட்டைகள், மொபட்டை பறிமுதல் செய்த போலீஸாா் சாராயம் கடத்தி வந்த புதுவை மாநிலம் பாகூரைச் சோ்ந்த கணேசன் மகன் ராஜ்குமாா் (19) என்பவரை கைது செய்தனா். மேலும், தப்பியோடிய குருவிநத்தத்தைச் சோ்ந்த க.கலைமணியைத் தேடி வருகின்றனா்.