காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மைப் பணி

டெங்கு ஒழிப்பு தினத்தையொட்டி காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

டெங்கு ஒழிப்பு தினத்தையொட்டி காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

காரமடை பேரூராட்சி செயல் அலுவலா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் பரமசிவம், வட்டார சுகாதாரப் மேற்பாா்வையாளா் லிங்கன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் தூய்மை செய்யப்பட்டு பிளீச்சிங் பவுடா், கொசு மருந்து அடிக்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுகாதார மேற்பாா்வையாளா்கள் காா்த்திகேயன், ரவிசந்திரன், சுகாதாரப் பரப்புரையாளா்கள் பாலாஜி, முஸ்தபா, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com