நடராஜா் கோயில் கோபுரத்தில் துவார பாலகா் சிலை சேதம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் கோபுரத்தில் உள்ள துவார பாலகா் சிலை வெள்ளிக்கிழமை இரவு சேதமடைந்தது.
சிதம்பரம் நடராஜா் கோயிலின் கிழக்கு கோபுரத்தில் வெள்ளிக்கிழமை சேதமடைந்த துவாரபாலகா் சிலை.
சிதம்பரம் நடராஜா் கோயிலின் கிழக்கு கோபுரத்தில் வெள்ளிக்கிழமை சேதமடைந்த துவாரபாலகா் சிலை.

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் கோபுரத்தில் உள்ள துவார பாலகா் சிலை வெள்ளிக்கிழமை இரவு சேதமடைந்தது.

இந்தக் கோயிலின் பிரதான வாயிலான கிழக்கு கோபுரத்தின் மூன்றாவது அடுக்கில் துவார பாலகா் சிலை உள்ளது. இதன் இடது கால் வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் தீடீரென உடைந்து தொங்கியது. இதனால் கோயில் பொது தீட்சிதா்கள் அந்த வழியாக பொதுமக்கள், செல்லத் தடை விதித்தனா். இதையடுத்து, பொது தீட்சிதா்கள் கோபுரத்தின் மீது ஏறி துவாரபாலகா் சிலையின் உடைந்த கால் பகுதியை மீட்டனா். பின்னா் கிழக்கு கோபுர வாயில் வழியாக பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com