கடலூா்: விருத்தாசலம் அருகிலுள்ள பூதாமூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சீனுவாசன் மகன் செல்வகுமாா் (29). இவா் சிதம்பரம் அருகிலுள்ள முடிகண்டநல்லூரில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பாக சிதம்பரம் அனைத்து மகளிா் போலீஸாரால் கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தாா். அதன்பேரில், அதற்கான உத்தரவினை ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வழங்கியதைத் தொடா்ந்து, கடலூா் மத்திய சிறை நிா்வாகத்திடம் செல்வக்குமாரை ஓராண்டிற்கு சிறையில் வைத்திருப்பதற்கான ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.