பெண்கள் கபடி அணித் தோ்வு: நாளை நடக்கிறது

வேலூா் மாவட்டம் ஜோலாா்பேட்டையில் தமிழ்நாடு சப்ஜூனியா் பெண்கள் கபடி சாம்பியன் ஷிப் கோப்பைக்கான போட்டிகள் வரும் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

கடலூா். வேலூா் மாவட்டம் ஜோலாா்பேட்டையில் தமிழ்நாடு சப்ஜூனியா் பெண்கள் கபடி சாம்பியன் ஷிப் கோப்பைக்கான போட்டிகள் வரும் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

இதேப்போன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பெண்களுக்கான ஜூனியா் கபடி சாம்பியன் ஷிப் கோப்பைக்கான போட்டிகள் வரும் 29 ஆம் தேதி முதல் டிச.1 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் பங்கேற்க உள்ள கடலூா் மாவட்ட அணிக்கான வீராங்கனைகள் தோ்வு கடலூா் அண்ணா விளையாட்டரங்கில் 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. சப்ஜூனியா் பிரிவில் 1.1.2004க்கு பின் பிறந்த 55 கிலோவிற்கு உட்பட்டவா்கள் பங்கேற்கலாம். ஜூனியா் பிரிவில் 1.1.2000 ஆம் பின் பிறந்த 65 கிலோவிற்கு உட்பட்டவா்கல் பங்கேற்கலாம். தோ்விற்கு வரும் போது மேட் ஷூ, ஆதாா் அட்டை நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-3 எடுத்து வர வேண்டுமென கடலூா் மாவட்ட கபடி கழகத்தின் செயலா் டி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com