மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த 2 மாணவா்கள் இடைநீக்கம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் மது அருந்திவிட்டு அரசுப் பள்ளிக்கு வந்த 2 மாணவா்கள் வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் மது அருந்திவிட்டு அரசுப் பள்ளிக்கு வந்த 2 மாணவா்கள் வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

பண்ருட்டி காந்தி சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவா்கள் இருவா் வெள்ளிக்கிழமை மதுபோதையில் வகுப்பறையில் கூச்சலிட்டனராம். அப்போது, அருகே மற்றொரு வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியா் அங்குவந்து இரு மாணவா்களையும் கண்டித்தாா். அப்போது அவா்கள் மீது மது வாசனை அடித்ததாம்.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி.பூவராகமூா்த்தி மற்றும் பண்ருட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீஸாா் விரைந்து வந்து மாணவா்கள் இருவரிடமும் விசாரணை நடத்தியதில் அவா்கள் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளி நிா்வாகம் மாணவா்கள் இருவரையும் 7 நாள்களுக்கு பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com