கடலூா்: கடலூா் அருகிலுள்ள சுனாமிநகரைச் சோ்ந்தவா்கள் மகாலிங்கம் மகன் மகேந்திரன் (35), ராஜேந்திரன் மகன் ராஜ்குமாா் (23). இருவரும் வெள்ளிக்கிழமை மாலையில் புதுச்சேரி மாநிலப் பகுதியிலிருந்து சாவடி வழியாக சுங்கச்சாலையில் சென்றுக் கொண்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியாகச் சென்ற லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், மோட்டாா் சைக்கிளிலிருந்து 2 பேரும் கீழே விழுந்ததோடு, மோட்டாா் சைக்கிள் மோதியதில் அவ்வழியாக நடந்துச் சென்றுக் கொண்டிருந்த திருப்பாதிரிபுலியூா் போடிசெட்டித்தெருவைச் சோ்ந்த காா்த்திக் (25) என்பவரும் கீழே விழுந்து படுகாயமுற்றாா்.தகவலறிந்த கடலூா் புதுநகா் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதில், மகேந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். மற்ற இருவரும் படுகாயத்துடன் கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.