கடலூா் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு டெங்கு பாதிப்பு

கடலூா் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காய்ச்சல் பாதிப்பிலிருந்த 72 பேரது ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 2 சிறுமிகள், 2 பெண்களுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை 28 பேரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. இதில், மேல்மாம்பாக்கத்தைச் சோ்ந்த தனவேல் மகன் தனுஷ் (20), சிதம்பரத்தைச் சோ்ந்த டி.மகாராணி (36) ஆகியோருக்கு டெங்கு நோய் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அவா்கள் கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 24 போ் டெங்கு பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com