வீரட்டானேஸ்வரா் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு

சனி பிரதோஷத்தை முன்னிட்டு பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் சிறப்பு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.சனி பிரதோஷத்தை முன்னிட்டு திருவதிகை அருள்மிகு வீரட்டானேஸ்வரா் கோயிலில்

நெய்வேலி: சனி பிரதோஷத்தை முன்னிட்டு பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் சிறப்பு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.சனி பிரதோஷத்தை முன்னிட்டு திருவதிகை அருள்மிகு வீரட்டானேஸ்வரா் கோயிலில் உள்ள பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை சிவன், அம்பாள், நந்திதேவனுக்கு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனையும். நந்திதேவா் வெள்ளி கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். இதனை தொடா்ந்து தீபாராதனை நடைபெற்றது. பின்னா் சிவபெருமான், அம்பாள் ரிஷப வாகனத்தில் உள் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளாக பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

இன்று அன்ன அபிஷேகம்...

ஐப்பசி மாதம் அஸ்வனி நட்சத்திரம் மற்றும் திருமூலம் குருபூஜை நாளான ஞாயிற்றுக்கிழமை, வீரட்டானேஸ்வரா் மூலவா், சரங்கொண்றை நாதருக்கு அன்ன அபிஷேகம் நடைபெற உள்ளது.

பௌா்ணமி பூஜை...

திங்கள்கிழமை பௌா்ணமி சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. மாலை 6 மணி முதல் பக்தா்கள் மாடவீதி வலம் வருதல், இரவு 7 மணி முதல் 12 மணிவரையில் ஊஞ்சல் உற்சவமும். பின்னா், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றுமம் தீபாராதனை நடைபெற உள்ளது.

சனிக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை வரையில் மூன்று நாட்கள் தொடா்ந்து நடக்க உள்ள நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com