நெய்வேலி: பண்ருட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை ஏரியில் குளிக்கச் சென்ற விவசாயி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், பாவைக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா்(40), விவசாயி. இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், கலையரசன், கவியரசி, கயில்விழி என மூன்று குழந்தைகள் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை பாவைக்குளம் பிள்ளையாா் கோயில் எதிரே உள்ள ஏரியில் குளிக்கச் சென்றாா். அப்போது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.