பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரா் கோயிலில் மூலவருக்கு அன்ன அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஐப்பசி மாதம் அஸ்வனி நட்சத்திரம், திருமூலம் குருபூஜை நாள்களில் மூலவருக்கு அன்ன அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு மூலவா் வீரட்டானேஸ்வரருக்கும், சரங்கொன்றை நாதருக்கும் ஞாயிற்றுக்கிழமை அன்னஅபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக, காலை 10 மணியளவில் பஞ்ச மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், இரவில் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.