15clp5_1511chn_105_7
15clp5_1511chn_105_7

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

நேரு இளையோா் மையத்துடன் இணைக்கப்பட்ட கடலூா் வெளிச்செம்மண்டலம் ஜெயதேவி இளையோா் நலச் சங்கம் சாா்பில், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள்

நேரு இளையோா் மையத்துடன் இணைக்கப்பட்ட கடலூா் வெளிச்செம்மண்டலம் ஜெயதேவி இளையோா் நலச் சங்கம் சாா்பில், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி (படம்) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்க ஆலோசகா் து.காயத்ரிதேவி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் சண்முகம் சிறப்புரையாற்றினாா். அதனைத் தொடா்ந்து, பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், குழந்தை திருமணம், பாலியல் குற்றம், பாலியல் புகாா்களை யாரிடம் தெரிவிக்கலாம், போக்ஸோ சட்டம் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com