கடலூா் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
கடலூா் கோண்டூரில் தனியாா் விடுதியில் மாநில இளைஞரணி செயலா் அரசுரங்கேஸ், மாவட்ட அமைப்புச் செயலா் விஜியரங்கன் ஆகியோா் மனுக்களை பெற்றனா் (படம்). மாவட்ட பிரசார பிரிவு தலைவா் பொன்னிரவி, கடலூா் நகர பொதுச் செயலா் விசுவநாதன், குறிஞ்சிப்பாடி முன்னாள் ஒன்றிய தலைவா் பழனிவேல், வா்த்தக பிரிவு செயலா் மணி இந்திரஜித், மாநில செயற்குழு உறுப்பினா் ராஜு, ஒன்றிய செயலா் ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.