அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

சிதம்பரம் அருகே வாய்க்காலில் அழுகிய நிலையில் பெண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

சிதம்பரம் அருகே வாய்க்காலில் அழுகிய நிலையில் பெண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

சிதம்பரம் அருகே சாமியாா்பேட்டை - வேளங்கிராயன்பேட்டை இடையே வாய்க்கால் செல்கிறது. இங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் கிடந்ததை அந்தப் பகுதி மக்கள் வியாழக்கிழமை பாா்த்தனா். இதுகுறித்த தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த புதுச்சத்திரம் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

உயிரிழந்த பெண் யாா், எந்த ஊா் என்ற விவரம் தெரியவில்லை. அவா் பச்சை வண்ண ஜாக்கெட், அதே நிறத்தில் பாவாடை அணிந்திருந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com