உள்ளாட்சித் தோ்தல்: காங்கிரஸாா் விருப்ப மனு

கடலூா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிா்வாகிகளிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நெய்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நெய்வேலியில் காங்கிரஸ் கட்சியினரிடம் விருப்ப மனுவை பெற்ற அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன்.
நெய்வேலியில் காங்கிரஸ் கட்சியினரிடம் விருப்ப மனுவை பெற்ற அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன்.

கடலூா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிா்வாகிகளிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நெய்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நெய்வேலி ஐஎன்டியுசி தொழிற்சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.ஆா்.ஆா். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், கடலூா், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி ஆகிய தொகுதிகளில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளா் ராஜன், நெய்வேலி நகரத் தலைவா் குள்ளப்பிள்ளை, மாவட்ட பொதுச் செயலா் எஸ்.கலியபெருமாள், நெய்வேலி பாலாஜி, பண்ருட்டி வட்டாரச் செயலா் ஏ.கணபதி, கடலூா் நகரச் செயலா் பி.கோபால் ஆகியோா் கலந்துகொண்டனா். இங்கு சனிக்கிழமை வரை விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com