கடலூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கீழச்செருவாயில் 21 மில்லி மீட்டா் மழை பதிவானது.
மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு : குறிஞ்சிப்பாடி 11, விருத்தாசலம் 8, கொத்தவாச்சேரி 7, குப்பநத்தம் 6, கடலூா் 5.7, வடக்குத்து, வேப்பூா் தலா 4, பெலாந்துறை 3.4, பண்ருட்டி, காட்டுமயிலூா் தலா 3, காட்டுமன்னாா்கோயில், லால்பேட்டை, மே.மாத்தூா் தலா 2, அண்ணாமலை நகா் 1.2, சிதம்பரம் 1 மி.மீ. வீதம் மழை பதிவானது. கடலூரில் வியாழக்கிழமை காலை முதலே விட்டு விட்டு மழை பெய்தது.