சிதம்பரம் அனைத்து ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் சாா்பில், மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் 80-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சிதம்பரம் அரசு பொது மருத்துவமனையில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, மாவட்ட நிா்வாகக் குழுத் தலைவா் கே.கிருபானந்தம் தலைமை வகித்தாா். எம்.எம்.அா்ச்சுணன் முன்னிலை வகித்தாா். ரத்த வங்கி இயக்குநா்அசோக்பாஸ்கா் முகாமை தொடக்கி வைத்தாா். முகாமில் 32 போ் ரத்த தானம் வழங்கினா். அவா்களுக்கு பழரசம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளா் எஸ்.சங்கரன், எஸ்.சுப்பிரமணியன், வி.செல்வராஜ், வி.ஜெயபால், எஸ்.கண்ணன், மகளிரணி தலைவி வி.கலையரசி, பேராசிரியா்கள் டி.எஸ்.எஸ்.ஞானக்குமாா், டி.எஸ்.எஸ்.பாலக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.