கடலூா்: கடந்த ஒரு வாரமாக கடலூா் மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வந்த மழை கடந்த 2 நாட்களாக சிறிய அளவிலேயே பெய்தது. திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேப்பூரில் 4 மி.மீ. மழை பெய்தது.
இதேபோல, கடலூா் 2.7 மி.மீ, குறிஞ்சிப்பாடி, பெலாந்துறை, மே.மாத்தூா் தலா 2.மி.மீ, விருத்தாசலம், கொத்தவாச்சேரி தலா ஒரு மி.மீ. மழை பெய்தது.
வங்கக் கடலில் கிழக்குக் காற்று அதிக ஈரமின்றி இருப்பதால், அடுத்த இரு நாள்களுக்கு மழை அதிகம் இருக்காது என கடலூா் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.