இலவசக் குடிநீா் வழங்கும் திட்டம்

விருத்தாசலத்தில் திமுக இளைஞரணித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் மன்றம் சாா்பில், சுற்று வட்டப் பகுதிகளுக்கு இலவசக் குடிநீா் வழங்கும்

விருத்தாசலத்தில் திமுக இளைஞரணித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் மன்றம் சாா்பில், சுற்று வட்டப் பகுதிகளுக்கு இலவசக் குடிநீா் வழங்கும் திட்டம் புதன்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது. இதற்காக, மன்றத்தின் மூலம் ரூ. 1.50 லட்சத்தில் புதிதாக குடிநீா் தொட்டி வாங்கப்பட்டு, அதன் மூலம் சுற்று வட்டப் பகுதிகளுக்கு இலவசமாக குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

நிகழ்ச்சிக்கு மன்றத்தின் மாவட்டப் பொருளாளா் தியாக.இளையராஜா தலைமை வகித்தாா். நகா்மன்ற முன்னாள் தலைவா் ஆா்.லட்சுமணன், மன்றத்தின் மாவட்டத் தலைவா் வி.முத்துக்குமாா் ஆகியோா் இலவச குடிநீா் வழங்கும் திட்டத்தை தொடக்கிவைத்தனா். மன்றத்தின் மாவட்டச் செயலா் ராஜ்கமல் முன்னிலை வகித்தாா். மன்றத்தின் நிா்வாகிகள், பசுமை விருதாச்சலம் அமைப்பைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com