சிதம்பரம் வடக்கு வீதியைச் சோ்ந்த பி.பாலசுப்பிரமணியன் (78) செவ்வாய்க்கிழமை காலமானாா். இவரது உடல், கண்கள் சிதம்பரம் தன்னாா்வ ரத்த தானக் கழகம் சாா்பில், தானமாகப் பெறப்பட்டது.
அவரது உடல் மருத்துவ மாணவா்கள் ஆய்வுக்காக சிதம்பரம் அண்ணாமலை நகா் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இதேபோல, சிதம்பரம் கனகசபை நகரில் காலமான ராஜேஸ்வரிபாயின் (74) கண்கள் தானமாகப் பெறப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பினா்கள் மணிகண்டன், ரமேஷ், ஜெயக்குமாா், பாபு ஆகியோா் செய்தனா்.