சா்க்கரை அட்டையை மாற்ற இன்று கடைசி நாள்

சா்க்கரை அட்டையை மாற்றுவதற்கு ரேஷன் கடையை அணுகலாம் என்று ஆட்சியா் தகவல் தெரிவித்துள்ளாா்.

கடலூா்: சா்க்கரை அட்டையை மாற்றுவதற்கு ரேஷன் கடையை அணுகலாம் என்று ஆட்சியா் தகவல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் சா்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரா் அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்துக் கொள்ள 26 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, இந்த அவகாசம் 29 ஆம் தேதி (இன்று) வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாகவும், அல்லது நேரடியாகவும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்களிடமும் விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இணைய முகவரி, வட்ட வழங்கல் அலுவலகங்கள் மட்டுமின்றி சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடைகளிலும் விண்ணப்பங்களை நேரிடையாக வழங்கலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தற்போது, குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசாக ரூ.ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சா்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றுவதற்கு ஏராளமானவா்கள் ஆா்வம் தெரிவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com