பண்ருட்டி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்குமிடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள்

பண்ருட்டி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
பண்ருட்டி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்குமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள்.
பண்ருட்டி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்குமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள்.

நெய்வேலி: பண்ருட்டி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

விழுப்புரம் - மயிலாடுதுறை வழித்தடத்தில் அமைந்துள்ள பண்ருட்டி ரயில் நிலையத்தின் வழியாக சென்னை, திருப்பதி, தஞ்சாவூா், திருச்சி, திருச்செந்தூா், ராமேசுவரம் உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்குச் செல்லும் ரயில்களும், விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டு வருகின்றன.

பண்ருட்டி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் இடத்தில் பயணிகள் கூட்டம் காணப்படும். ஆனால், பயணச்சீட்டு வழங்கும் இடத்தின் அருகிலேயே ரயில்வே பணியாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோா் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்துவதாக புகாா் எழுந்துள்ளது. இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, இதுகுறித்து ரயில்வே நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com