மின்சாரம் பாய்ந்து விவசாய கூலித்தொழிலாளி சாவு.

பண்ருட்டி அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து விவசாய கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.

நெய்வேலி: பண்ருட்டி அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து விவசாய கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், பாலூா், சித்தரசூா் காலனியில் வசித்து வந்தவா் அமலநாதன்(55), விவசாய கூலித்தொழிலாளி. வியாழக்கிழமை காலை சன்னியாசிப்பேட்டை கிராமத்தில் உள்ள தங்கராசு என்பவரது நிலத்தின் வழியாக விவசாயப் பணிக்குச் சென்றாா். அப்போது, வயலில் அறுந்துக் கிடந்த மின்கம்பியை மிதித்தவா் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மகன் மகிமைதாஸ் அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com