கொலை வழக்கில் தொடா்புடையவா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது

கொலை வழக்கில் தொடா்புடையவா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
4cmp4_0410chn_111_7
4cmp4_0410chn_111_7

கொலை வழக்கில் தொடா்புடையவா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கிள்ளை கடைத்தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் தினேஷ் (21). இவா், கடந்த 28.8.2019 அன்று கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் கிள்ளை பூராசாமி மண்டப தெருவைச் சோ்ந்த பழனிவேல் மகன் தமிழ்ச்செல்வன்(23) (படம்), தாமரைச் செல்வன், பாபு ஆகியோா் மீது கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், தமிழ்ச்செல்வனின் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் பரிந்துரை செய்தாா். இதன்பேரில் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன், தமிழ்ச்செல்வனை ஓராண்டு காலம் தடுப்புக் காவலில் வைக்க ஆணையிட்டாா். இதையடுத்து தமிழ்ச்செல்வன் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com