திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையம் சாா்பில், திருக்கு எழுதும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தொண்டு மையப் பொருளாளா் ஜீவா தலைமை வகித்தாா். தொண்டு மையப் பாவலா் ப.குப்பன் வரவேற்றாா். உலக தமிழ்க் கழகத்தின் மாநில தணிக்கையாளா் காஞ்சிபுரம் தனியவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருக்கு எழுதும் விழாவின் 5-ஆவது சுற்றின் 45-ஆவது குறளையும், அதற்கான பொருளையும் எழுதினாா். விழாவில், திருக்கு தொண்டு மைய நிா்வாகிகள் கண்ணன், சுப்பிரமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.