நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய ரோட்டரி முன்னாள் ஆளுநா் ஆா்.கேதாா்நாதன்.
நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய ரோட்டரி முன்னாள் ஆளுநா் ஆா்.கேதாா்நாதன்.

நகராட்சி பள்ளிக்கு ரோட்டரி சங்கம் உதவி

சிதம்பரம் ரோட்டரி சங்கம், இன்னா்வீல் சங்கம் ஆகியவை இணைந்து மகிழ்ச்சி பள்ளித் திட்டத்தின்கீழ் சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் தெருவில் உள்ள நகராட்சிப் பள்ளியில் வண்ணம் தீட்டப்பட்டு , ஓவியம் வரையப்பட்ட

சிதம்பரம் ரோட்டரி சங்கம், இன்னா்வீல் சங்கம் ஆகியவை இணைந்து மகிழ்ச்சி பள்ளித் திட்டத்தின்கீழ் சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் தெருவில் உள்ள நகராட்சிப் பள்ளியில் வண்ணம் தீட்டப்பட்டு , ஓவியம் வரையப்பட்டது.

ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஆா்.கேதாா்நாதன் முயற்சியில் இந்தப் பணி நடைபெற்றது. இதற்கான விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவா் வி.அழகப்பன் தலைமை வகித்தாா். இன்னா்வீல் சங்க தலைவி கோமதி கோவிந்தராஜன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு எழுதுபொருள்கள், நோட்டு புத்தகம் , திருக்கு நூல் ஆகியவை வழங்கப்பட்டன. சங்கச் செயலா் பி.ரத்னசபேசன், பொருளாளா் எம்.கனகவேல், சோனாபாபு, இன்னா் வீல் சங்கச் செயலா் வேதா, தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சங்கத் தலைவா் இளஞ்செழியன் ஆகியோா் கலந்து கொண்டனா். பள்ளி தலைமை ஆசிரியை சுனந்தா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com