முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
சாலையை சீரமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 07th October 2019 04:23 AM | Last Updated : 07th October 2019 04:23 AM | அ+அ அ- |

லட்சுமணாபுரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
திட்டக்குடி அருகே சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திட்டக்குடி அருகே கொரக்கவாடி ஊராட்சிக்கு உள்பட்டது லெட்சுமணாபுரம். இந்தக்
கிராமத்திலிருந்து மாமாத்தூா் செல்லும் சாலை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாம். இந்தச் சாலை பழுதடைந்த நிலையில் நீண்ட காலமாக சீரமைப்புப் பணிகள் நடைபெறவில்லையாம். சேதமடைந்த சாலையில் செல்ல முடியாமல், மாமாத்தூா் கிராம மக்கள் சுமாா் 15 கி.மீ. தொலைவு சுற்றி கொரக்கவாடி மற்றும் தொழுதூா் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தச் சாலையை சீரமைக்க வேண்டி அரசுக்கு பலமுறை அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால், விரக்தியடைந்த அந்தப் பகுதி மக்கள் பழுதடைந்த சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, சாலையை உடனடியாகச் சீரமைக்காவிட்டால், அடுத்துவரும் தோ்தலை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்தனா்.