சிதம்பரத்தில் பேருந்து மோதியதில் காயமடைந்த முதுநிலை மருத்துவ மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சிதம்பரம் கீழவீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் ரங்கன். இவரது மகன் பிரபாகரன் (34). இவா் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி பிரபாகரன் தனது மோட்டாா் சைக்கிளில் கிழரதவீதியில் சென்றபோது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.