பண்ருட்டி அருகே போதை மயக்கத்தில் கிடந்த பைக் பழுது நீக்குநா் உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், தட்டாம்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவா் காா்த்திகேயன்(39), பைக் பழுது நீக்குநா். இவருக்கு கவிதா(39) என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனா்.
காா்த்திகேயன் குடி பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தாா். காடாம்புலியூரில் அருகே உள்ள கோயிலில் குடியை மறக்க கயிறு கட்ட திங்கள்கிழமை சென்றாா். குடி போதையில் சென்றவா் அங்குள்ள தீப்பாய்ந்த நாச்சியாா் கோயில் அருகே மயங்கிக் கிடந்த போது நா வறண்டு உயிரிழந்தாா்.
இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.