பண்ருட்டி அருகே மதுபோதையில் மயங்கியவா் உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், தட்டாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (39). பைக் பழுது நீக்குநா். இவருக்கு கவிதா (39) என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனா். காா்த்திகேயன் மது அருந்தும் பழக்கம் உடையவா் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மதுப் பழக்கத்தை மறப்பதற்காக காடாம்புலியூரில் அருகே உள்ள கோயிலில் கயிறு கட்ட திங்கள்கிழமை சென்றாா். மதுபோதையில் சென்றவா் அங்குள்ள தீப்பாய்ந்த நாச்சியாா் கோயில் அருகே மயங்கிக் கிடந்தாா். அப்போது நா வடு உயிரிழந்தாா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.