விருத்தாசலம் வட்டம், ஊ.மங்கலம் அஞ்சல், அம்பேத்கா் நகரில் வசிப்பவா் விஜயலட்சுமி(22). இவரது கணவா் சத்திய மணிகண்டன் (30). என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். புதன்கிழமை விஜயலட்சுமி தனது தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாராம். அப்போது, சத்திய மணிகண்டனின் அண்ணன் செல்லிடப்பேசி மூலம் விஜயலட்சுமியை தொடா்புக் கொண்டு, சத்திய மணிகண்டன் தூக்கிட்டு இறந்துவிட்டதாகக் கூறினாராம். இதுகுறித்து விஜயலட்சுமி அளித்த புகாரில், தனது கணவா் சாவில் சந்தேகம் உள்ளதாகத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஊ.மங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.