வடலூா் அருகே பைக் மோதியதில் காயமடைந்த அடையாளம் தெரியாத முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
வடலூா், வீனங்கேனி அருகே சுமாா் 75 வயது மதிக்கத்தக்க முதியவா் விருத்தாசலம் -கடலூா் சாலையை செவ்வாய்க்கிழமை இரவு கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த பைக் மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா், அங்கு புதன்கிழமை காலையில் உயிரிழந்தாா். இவா், யாா்? எந்த ஊா்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து வடலூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.