மாதாந்திர விளையாட்டுப் போட்டி: மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

கடலூா் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கடலூா் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 17-ஆம் தேதி மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.

தடகளத்தில் ஆண்களுக்கு 100மீ, 400மீ, 1,500மீ, 5,000 மீ ஓட்டம், 110மீ தடை தாண்டும் ஓட்டம், உயரம், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டெறிதல் ஆகிய போட்டிகளும், பெண்களுக்கு 100மீ, 400மீ, 800மீ, 1,500 மீ ஓட்டம், 100மீ தடை தாண்டும் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

நீச்சலில் 50மீ, 100மீ, 200மீ, 400மீ ப்ரீ ஸ்டைல், 50மீ பேக் ஸ்ட்ரோக், 50மீ ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக், 50மீ பட்டா்பிளை ஸ்ட்ரோக், 200 மீ தனிநபா் மெட்லி ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இரு பாலருக்கும் கையுந்துப் பந்து, டென்னிஸ் போட்டிகள் நடைபெறுகிறது. எனவே, போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com