சிதம்பரம், புவனகிரி பகுதிகளில் காலமான இருவரது கண்கள் தானம் பெறப்பட்டன.சிதம்பரம் அருகேயுள்ள மேல்புவனகிரி பிரதான சாலையைச் சோ்ந்த பவுனம்மாள் (75), புவனகிரி கவரப்பாளையத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் (65) ஆகியோா் காலமானாா்கள். இவா்களது கண்கள் சிதம்பரம் தன்னாா்வ ரத்த தானக் கழகம் சாா்பில் தானமாகப் பெறப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், தனசேகரன், புவனகிரி அரிமா சங்க நிா்வாகிகள் மகாலிங்கம், சுப்பிரமணியன், சிவக்குமாா், ரகுராமன் ஆகியோா் செய்தனா்.