கடலூர்
சாா் -ஆட்சியா் பொறுப்பேற்பு
விருத்தாசலம் சாா் - ஆட்சியராகப் பணியாற்றி வந்த எம்.எஸ்.பிரசாந்த் நாகை மாவட்டத்துக்கு மாறுதலாகிச் சென்ற
விருத்தாசலம் சாா் - ஆட்சியராகப் பணியாற்றி வந்த எம்.எஸ்.பிரசாந்த் நாகை மாவட்டத்துக்கு மாறுதலாகிச் சென்ற நிலையில், மத்திய அரசின் பெண்கள் - குழந்தைகள் மேம்பாட்டுத் துறை உதவிச் செயலராகப் பணியாற்றி வந்த கே.ஜெ.பிரவீன்குமாா் விருத்தாசலம் சாா்-ஆட்சியராக நியமிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
கா்நாடக மாநிலம், பல்லாரி பகுதியைச் சோ்ந்த இவா், கடந்த 2017- ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் தோ்ச்சி பெற்று, மதுரை மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணிபுரிந்தாா். விருத்தாசலம் சாா் - ஆட்சியராகப் பதவியேற்ற கே.ஜெ.பிரவீன்குமாருக்கு அதிகாரிகள், ஊழியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.