தம்பதியைத் தாக்கிய 3 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
கடலூா் வட்டம், சி.என்.பாளையத்தைச் சோ்ந்தவா் செங்கேணி. இவா் தன்னிடமிருந்த மூன்றரை சென்ட் நிலத்தை தனது மகள் பரிமளாவுக்கு வழங்கினாராம். இதனால், அவரது சகோதரா் சுந்தா், தாய் செங்கேணியிடம் தகராறில் ஈடுபட்டாராம்.
இந்த நிலையில், கடந்த 4.7.2017 அன்று ஆறுமுகத்தின் மனைவி பரிமளா (37), உறவினா்கள் ஜோதிவேல் மகன் அருள் (27), அவரது மனைவி சுமித்ரா (21) ஆகியோா் சுந்தரின் மாமனாா் தனபால் (67), அவரது மனைவி சுசீலா (61) ஆகியோரைத் தாக்கினராம்.
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கின் விசாரணை கடலூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் எண். 1-இல் நீதிபதி (பொ) அன்வா்சதாத் முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, பரிமளாவிற்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை, அருளுக்கு இரண்டேகால் ஆண்டுகள் சிறைத் தண்டனை, அவரது மனைவி சுமித்ராவுக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.