வடலூா் பகுதியில் இயங்கும் மதுக் கடைகளை மூடாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்தது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் வடலூா் நகரச் செயலா் சோதி.குமரவேல் தமிழக முதல்வா் உள்ளிட்டோருக்கு அனுப்பிய மனு: வடலூரில் ராமலிங்க அடிகள் நிறுவிய சத்திய ஞானசபை அமைந்துள்ளது. வடலூரை புனித நகரமாக அறிவிக்க அரசு பரிசீலனை செய்து வரும் நிலையில், நெத்தனாங்குப்பம், சிட்கோ தொழில்பேட்டை, கருங்குழி சாலை உள்ள மதுக் கடைகளை மூட வேண்டும். அவ்வாறு மூடாதபட்சத்தில், கட்சியின் சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.