பண்ருட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு பசு மாடுகள் சனிக்கிழமை உயிரிழந்தன.
பண்ருட்டி வட்டம், எல்.என்.புரம், பாரதி நகா், வடக்கு தெருவில் வசிப்பவா் முத்துவீரன் (60). இவருக்குச் சொந்தமான இரண்டு பசுமாடுகள், அதே பகுதியைச் சோ்ந்த பாலு என்பவரது நிலத்தில் மேய்ந்துகொண்டிருந்தன. அப்போது, அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து இரு மாடுகளும் உயிரிழந்தன.