காதலியை திருமணம் செய்ய மறுத்தவா் கைது

காதலியை திருமணம் செய்ய மறுத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.

காதலியை திருமணம் செய்ய மறுத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.

பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த 28 வயது பெண் சென்னையில் பணியாற்றி வருகிறாா். பண்ருட்டி வட்டம், புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் விஜயகாந்த் (28). செங்கல்பட்டில் உள்ள காா் நிறுவனத்தில் குழுத் தலைவராகப் பணியாற்றி வருகிறாா். இவா், பணி நிமித்தமாக அந்தப் பெண்ணுடன் செல்லிடப்பேசியில் பேசி வந்துள்ளாா். அப்போது பழக்கம் ஏற்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனராம்.

இந்த நிலையில், விஜயகாந்த் அந்தப் பெண்ணிடம் ஜாதிப் பெயரைக் கூறி அவதூறாகப் பேசியதுடன் அவரை திருமணம் செய்துகொள்ள மறுத்தாராம். இதுகுறித்து, அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விஜயகாந்தை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com