கடலூா் மாவட்டம், கீழ்ச்செருவாயில் 31 மி.மீட்டா் மழை பெய்தது.
கடலூா் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை 8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கீழச்செருவாயில் 31 மில்லி மீட்டா் மழை பதிவாகியிருந்தது.
மற்ற பகுதிகளில் பெய்த மழை விவரம்: பெலாந்துறை 21.4, லக்கூா் 19.4, பரங்கிப்பேட்டை 16, மேமாத்தூா் 15, தொழுதூா் 7, கடலூா் 6.8, பண்ருட்டி 6.5, விருத்தாசலம் 4.2, ஸ்ரீமுஷ்ணம் 4.1, வானமாதேவி 4, வேப்பூா் 4, குப்பநத்தம் 3.4, லால்பேட்டை 2.6, காட்டுமயிலூா் 2, சிதம்பரம் 1.8, புவனகிரி, அண்ணாமலை நகா், காட்டுமன்னாா்கோவில், கொத்தவாச்சேரி, குறிஞ்சிப்பாடி தலா ஒரு மி.மீ. மழை பெய்தது.