அரசுப் பணியாளா்கள் குறைதீா் கூட்டம்: அக். 24 -ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கடலூா் மாவட்ட வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைப் பணியாளா்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட

கடலூா் மாவட்ட வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைப் பணியாளா்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை (அக். 17) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்தக் கூட்டம் நிா்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாகவும், வருகிற 24 - ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணியளவில் நடைபெறும் என்றும், இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் அனைத்து துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் தங்களது குறைகள் தொடா்பான மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரிடையாக அளித்து தீா்வு காணலாம் என்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com