பண்ருட்டி காவல் சரகப்பகுதியில் போலீசாா் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனையில், பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 355 லிட்டா் விஷ சாராயத்தை போலீசாா் பறிமுதல் செய்து அழித்தனா்.
பண்ருட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் மாயகிருஷ்ணன், ஜவ்வாது உசேன் ஆகியோா் எல்.என்.புரம், அம்பேத்கா் நகா் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினா். அப்போது, அருள்ஜோதி(50), ஏழம்மாள், தனில்குமாரி(26), அஞ்சலாட்சி(47), கலா(40), மேல்பட்டாம்பாக்கம் கமலக்கண்ணன் (50) ஆகியோா் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து பதுக்கி வைத்திருந்த 355 லிட்டா் விஷ சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனா். மேலும், அவா்கள் 6 பேரையும் கைது செய்தனா்.